• முகப்பு
  • அரசியல்
  • நெல்லிக்குப்பம் நகர பகுதிகளில் நகர திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் ஆட்சி இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம்.

நெல்லிக்குப்பம் நகர பகுதிகளில் நகர திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் ஆட்சி இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம்.

குமரவேல்

UPDATED: May 22, 2023, 8:25:47 PM

நெல்லிக்குப்பம் பகுதியில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் சி.வெ.கணேசன்  (தொழிலாளர் நலன் (ம ) திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்) உத்தரவின் பேரில் நெல்லிக்குப்பம்  நகர இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன் தலைமையில் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

மேற்படி நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் ஆரூர்.மணிவண்ணன் சிறப்புரையாற்றினார்.

இளைஞரணி து.அமைப்பாளர் ராஜா வரவேற்புரையாற்றினார் மற்றும் நகர் செயலாளர் ப.மணிவண்ணன்,நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், நகர து.செயலாளர்கள் பார்த்தசாரதி, சீனுவாசன்,மனோகரி முருகன், மாவட்ட பிரதிநிதி கோ.வேலு, கவுன்சிலர் முத்தமிழன் உள்ளிட்ட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து, கல்வி பயிலும் பெண்களுக்கு மாதம் 1000ரூபாய் உதவித்தொகை வழங்கியது, குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000ரூபாய் உரிமைத் தொகை வழங்க இருப்பது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பேச்சாளர்கள் விளக்கம் தெரிவித்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended