கைலாசா கைமாறுதாமே உங்களுக்குத் தெரியுமா?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கைமாறுகிறதா கைலாசா... கைலாசா அதிபர் நித்யானந்தா உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும்நிலையில், அவரை விட்டு அவரது சீடர்கள் பலரும் புறப்படத்தொடங்கி விட்டதாகவும், அவரது சொத்துக்களை அவர்களபகரித்து விட்டதாக தகவல்கள்வெளியாகின. அதுத்தொடர்பான விளக்கமளிக்கும் நிலையில் தற்போது நித்யானந்தா இல்லையென்பதால், அவர் சார்பில் அவரதுசிஷ்யைகள் சிலர் வீடியோமூலம் சில தகவல்களை பகிர்ந்து உள்ளனர். தமிழ் , ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் அந்த வீடியோக்கள் தயாரிக்கப் பட்டுள்ளது. அதில் தமிழில் நித்யானந்தாவின் சிஷ்யைஆத்மப்ரியானந்தா என்பவர்பேசியுள்ளார். இந்த கைலாசம் என்பது, மொத்த இந்துசனாதனத்தின் கோட்பாடுகள், கலாச்சாரம், இதனுடைய மொத்தத்தின் புனர் அமைப்பு. பரமசிவனாரே... நேரடியாக திருமேனி தாங்கிவந்து, பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவனாக , இந்த திருப் பணியை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். செய்துமுடித்தே தீருவார்... இதிலெந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மாற்றமுமில்லை. இதில் தொடர்ந்து இந்துசன்யாசியகளாக இருந்து , அவரிடம் நேரடியாக தீட்சைபெற்ற நானும், சக சன்யாசிகளும் சேர்ந்து, இந்தகைலாசத்தை புனரமைப் பதில் தொடர்ந்து ஈடுபடுவோம், உறுதுணையாக இருப்போம். இதிலெந்த மாற்றுக் கருத்துமில்லை. இதில் முக்கியமாக நான்சொல்ல விரும்புவது என்னன்னா... விட்டுட்டு ஓடுறதுக்கு, நாங்கபாவடை சன்யாசிகளல்ல... பரம சிவனிடமிருந்தே நேரடியாக தீட்சைபெற்ற சன்யாசிகள். அதனால், இந்த கைலாசத்தை யாராலும் அழிக்கவும்முடியாது. கைலாசத்தின் புனர் அமைப்பை நிறுத்தவும்முடியாது. எங்கள் ஞானசர்குரு நாதர் பகவான்நித்யானந்தர் அவர்களோடு இணைந்து இதைசெய்வோம். தொடர்ந்து இதைசெய்வோம், செய்தேமுடிப்போம். இந்தப்பதிவை நான் இங்குசொல்ல விரும்புகிறேன்,'' என்று அந்த பதிவில், நித்யானந்தாவின் பக்தை கூறியுள்ளார். செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி

VIDEOS

RELATED NEWS

Recommended