முக்கொம்பு மேலணையில் முன்னேற்பாடுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தமிழ்நாடு முதலமைச்சர், வருகின்ற 26 ஆம் தேதி திருச்சிராப்பள்ளி முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள புதிய கதவனையைத் திறந்து வைத்திட வருகை தருவதை முன்னிட்டு, முக்கொம்பு மேலணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், இ.ஆ.ப., அவர்கள் இன்று (23..6.22) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், இ.கா.ப.,மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.