• முகப்பு
  • crime
  • சிதம்பரம் நடராஜர் சுவாமியை அவதூறாகப் பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

சிதம்பரம் நடராஜர் சுவாமியை அவதூறாகப் பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதில் சுமார் 400 க்கும் மேற்பட்ட இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் பல அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டனர். நாம் புனிதமாக போற்றும் சிதம்பரம் ஆலயத்தில் வீற்றிருக்கும் நடராஜப் பெருமானையும் சிதம்பரத்திலுள்ள தில்லை காளியையும் கொச்சையாக விமர்சனம் செய்து YOU Tube இணையத்தில் U2 Brutus என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியேற்றியுள்ளனர். அதில் பேசியுள்ள மைனர் விஜய் நெல்சன் என்பவன் தில்லை காளிக்கு நடராஜருக்கும் இடையில் நடந்த திருவிளையாடல்களை திரித்து நடராஜர் உள்ளாடை அணியாமல் ஒரு காலைத் தூக்கி நடனமாடி தில்லை காளியை வென்றார் என்று ஆபாசமாக பேசி கேலி செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். இந்த கருப்பர் கூட்டம் என்னும் பெயரில் இதே இந்து மதத்தையும் இந்து கடவுளையும் திட்டமிட்டு இழிவு செய்து வருவதை எவ்வளவு காலம் பொறுத்து கொள்வது. தமிழக அரசு உடனடியாக இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், தமிழக அரசு இன்னும் ஏன் தூங்கி கொண்டு உள்ளது, தமிழக முதல்வர் அனைவருக்குமே பொதுவானவர். இதேபோல் ஒரு இஸ்லாமியர் , கிறிஸ்தவர்ஐ பேசி இருந்தால் உடனடியாக குண்டர் சட்டம் பாய்கிறது, ஏன் இந்து கோயிலை பற்றி பேசியவர்கள் மீது ஏன் இன்னும் குண்டர் சட்ட பாயவில்லை, உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை இந்து முன்னணி செய்யும் என்று கூறினார். பேட்டி : மனோகர் இந்து முன்னணி மாநில செயலாளர். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.

VIDEOS

RELATED NEWS

Recommended