கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சிதம்பரம் தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் மக்கின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசையும் அமலாக்கத் துறையும் கண்டித்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எங்கள் கட்சித் தலைவியையும் தலைவரையும் அவமானப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு மீண்டும் மீண்டும் அமலாக்கத் துறையால் ஆஜராக வேண்டும் என்று கூறுவதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம் என்று மத்திய மோடி அரசையும் வன்மையாக கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்