தாளவாடியில் ஓடும் ஆம்புலன்ஸில் பிரசவம்.

மகேஷ் பாண்டியன்

UPDATED: May 27, 2023, 1:36:16 PM

கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரம் மாவட்டம் ஆலூர் ஹொம்மா பகுதியை சேர்ந்தவர் பிரதீப், இவருடைய மனைவி ஜோதி (28).

நிறைமாத கர்ப்பிணியான அவர் தாய் வீடான தாளவாடி அருகில் உள்ள மகாராஜபுரம் கிராமத்தில் தங்கியிருந்தார்.

நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென பிரசவ வலியால் துடித்தார். அதை அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவசர சிகிச்சை ஊர்தி 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் தாளவாடி அருகில் உள்ள மகாராஜன்புரம் பகுதியை சென்று அடைந்தது.

அவரை பரிசோதித்த அவசர சிகிச்சை மருத்துவ உதவியாளர் நாகராஜ் மற்றும் ஓட்டுனர் அந்தோணி ராஜ் உடனடியாக தாளவாடி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். 

கர்ப்பிணி பெண் மற்றும் உறவினர்களின் விருப்பத்தின் பேரில் தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து கர்நாடக மாநில சாம்ராஜ் நகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸ் சோமவர்பேட்டை அருகே வந்தபோது ஜோதிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அந்தோணி ராஜ் வாகனத்தை ஓரமாக நிறுத்தி மருத்துவ உதவியாளர் நாகராஜ் அவர்கள் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார்.

அப்போது ஜோதி பிரதீப் தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் பத்திரமாக சாம்ராஜ் நகரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் நாகராஜ் மற்றும் வாகன ஓட்டுனர் அந்தோணி ராஜ் ஆகியோரின் இந்த செயலை தாளவாடி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

VIDEOS

RELATED NEWS

Recommended