• முகப்பு
  • district
  • கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்து 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம்.

கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்து 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பாலப்பட்டு கிராமத்தில் அப்பாதுரை என்பவர் தனது மகளுடன் வசித்து வருகின்றார் இந்த நிலையில் நேற்று இரவு சமைத்து விட்டு கேஸ் அடுப்பை அணைக்க பகுதியில் அப்படியே தூங்கியுள்ளனர். இந்த நிலையில் கேஸ் சிலிண்டர் முழுவதும் இருந்த எரிவாயு கசிந்து வீடு முழுவதும் பரவியது. இதனை அறியாமல் அப்பாதுரையின் மகள் சித்ரா காலை 7 மணி அளவில் பால் காய்ச்சுவதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். கேஸ் அடுப்பை பற்ற வைக்கும் போது திடீரென தீப்பற்றி கூரை வீடு மேற்பகுதியில் தீ பிடித்துள்ளது. உடனடியாக கேஸ் அடுப்பை அணைத்துவிட்டு அலறி அடித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய சித்ரா அக்கம்பக்கத்தினர் இடையே கூறுவதற்கு தீ மளமளவென பரவி வீடு முற்றிலும் பரவியது. இதுகுறித்து சங்கராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் மேலும் இந்த தீ விபத்தால் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசம் ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய செய்திகள் கள்ளக்குறிச்சி,இன்றைய முக்கிய செய்திகள் கள்ளக்குறிச்சி,இன்றைய செய்திகள் கள்ளக்குறிச்சி,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,District news,political news,crime news,News in various districts,kallakurichi flash news,kallakurichi latest news tamil,kallakurichi today news tamil,house caught fire due to a gas cylinder leak and 3 lakh worth of goods were burnt and damaged.

VIDEOS

RELATED NEWS

Recommended