அரசு அதிகாரிக்கு அறிவாள் வெட்டு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேனிமாவட்ட ஒருங்கினைந்த குழந்தைகள்வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மாவட்டதிட்ட அலுவலராக பணியாற்றி வருபவர், ராஜராஜேஸ்வரி ( 52). இன்று அலுவகத்தில் வழக்கமானபணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அதே அலுவலகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு இளநிலைஉதவியாளராக பணியாற்றிய போடியைச்சேர்ந்த உமாசங்கர் என்பவர், ராஜராஜேஸ்வரியைசந்திக்க அவரது அறைக்குள்சென்றார். அப்போது ராஜராஜேஸ்வரியிடம் பேசி கொண்டிருந்த உமா சங்கர், தான் மறைத்துவைத்திருந்த அரிவாளை எடுத்து ராஜ ராஜேஸ்வரியை கை, தலை, முகம் ஆகிய இடங்களில்சரமாரியாக அடுத்தடுத்து வெட்டினார். ரத்தவெள்ளத்தில் இருந்த ராஜ ராஜேஸ்வரியின் அலறல்சத்தம் கேட்டு அறைக்கு வந்த ஊழியர்கள் உமாசங்கரைவளைத்து பிடித்து அங்கிருந்த அறையில் வைத்துபூட்டினர். உடனடியாக ராஜ ராஜேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். தகவலறிந்து சம்பவஇடத்திற்கு விரைந்துவந்த போலீசார், அங்கு அடைத்துவைக்கப்பட்டிருந்த உமாசங்கரை கைதுசெய்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவரிடம்நடத்திய விசாரணையில், 2015 ஆம் ஆண்டு பணியாற்றிய போது ஆவணங்களை முறையாகபராமரிக்காததால் உமாசங்கரை சஸ்பெண்ட் மற்றும் சார்ஜ்சீட் பதிவுசெய்ததாகவும், மேலும்அவரை திருப்பூர்மாவட்டத்திற்கு பணியிடைமாற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தனக்குகிடைக்க வேண்டிய பதவி உயர்வுகிடைக்காமல் போனதால் ஆத்திரத்தில் ராஜ ராஜேஸ்வரியை அரிவாளால் வெட்டியது தெரிய வந்தது. தற்போது மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட ராஜ ராஜேஸ்வரியின் உடல்நிலை கவலைக் கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சமூகநலத்துறை அலுவலகத்தில் பெண்திட்ட அலுவலர் பட்டப் பகலில் அரிவாளால் வெட்டப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended