எடப்பாடியார் தலைமைதான் வேண்டும் என்று கடலூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் தீர்மானம்!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணா திமுக சார்பில் கடலூர் கிழக்கு மாவட்டம் கழக அமைப்பு தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கழக நிர்வாகிகளுக்கு கழகத்தின் வளர்ச்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கடலூர் கிழக்கு மாவட்ட அண்ணா திமுக மாவட்ட செயலாளர் மற்றும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
இதில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான பாண்டியன் பேசுகையில் மாவட்டச் செயலாளர்கள் மீட்டிங்கில் அண்ணா திமுகவுக்கு ஒற்ற தலைமைதான் வேண்டும் என்றும் அதுவும் முன்னாள் முதல்வர் எடப்பாடி தலைமையில் அவர்கள் தான் அண்ணா திமுகவை வழிநடத்த முடியும் என்று நான் கூறினேன் தற்போது சில சலசலப்புகள் ஏற்பட்டு உள்ளது அதை பற்றி எங்களுக்கு எந்த கவலையும் கிடையாது.
வருகின்ற பொதுக்குழுவில் அண்ணா திமுகவின் ஒரே தலைமை எடப்பாடி அவர்கள் மட்டும்தான் அவர் தலைமையில் தான் பாராளமன்ற தேர்தலையும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் சந்திக்க முடியும் இரட்டை தலைமை என்பது ஏற்றுக்கொள்ள கூடியது கிடையாது.
ஓபிஎஸ் , இபிஎஸ் இருவரும் இருக்கும்பொழுதே ஒரே தலைதான் வேண்டும் என்று நான் பேசினேன் அப்போது வாயைத் திறக்காத ஓபிஎஸ் இப்பொழுது ஏன் பேசுகிறார் எந்த பிரச்சனைகள் நடந்தாலும் பொதுக்குழு செயற்குழுவில் எடப்பாடியார் தலைமைதான் வேண்டும் என்று கடலூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் நாங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
ஆகையினால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலும் சரிதான் எந்த தேர்தலாக இருந்தாலும் எடப்பாடி அவர்கள் தலைமை தான் நாங்கள் ஆதரிப்போம் அவர் வழியில் நடப்போம் என்று அண்ணா திமுக சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் கூறினார்.
ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.