முன்னாள் பாரத ரத்னா பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் காங்கிரஸார் தீவிரவாத எதிர்ப்பு உறுதி மொழியும் ஏற்பு
JK
UPDATED: May 21, 2023, 9:27:05 AM
முன்னாள் பாரத ரத்னா பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டெல் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அப்போது தீவிரவாத எதிர்ப்பு உறுதி மொழியும் எடுத்து கொள்ளப்பட்டது.
மேலும், பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாநகர மாவட்ட துணைத் தலைவர் முரளி சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் திருச்சி கிழக்கு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் முஹம்மது ரஃபி மாவட்டச் செயலாளர் பட்டேல் பூக்கடை பன்னீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.