பண்ருட்டியில் கல்லூரி மாணவி மாயம்.

இடும்பன்

UPDATED: May 22, 2023, 8:19:47 PM

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சித்திரைச்சாவடி திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் இவரது மகள் காவியா (20).

இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

தேர்வு முடிந்து விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். 21.5.2023  இவரது தந்தையும், தாயும் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது தனது மகள் காவியா காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். புகாரில் சூர்யா என்ற வாலிபர் ஆசைவார்த்தை கூறிய தனது மகளை கடத்தியதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை வலை வீசி தேடி வருகிறார்.

  • 1

VIDEOS

RELATED NEWS

Recommended