பேருந்திலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவன் பலி
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கும்பகோணம் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார் பாளையம் சேர்ந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சதீஷ்குமார் இவர் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் பிஏ சுற்றுலா படித்து வந்தார்.
கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தில் படியில் நின்றவாறு சென்றபோது பேருந்து நிலையம் அருகே 60 அடி சாலையில் பஸ் திரும்பும் பொழுது சாலையின் நடுவே மின்கம்பத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகையில் மோதி நிலைதடுமாறி தவறி கீழே விழுந்து உயிரிழப்பு.
கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தார் விசாரணை நடத்திவருகின்றனர் இதனிடையே கல்லூரி மாணவர்கள் மருத்துவமனை வளாகம் முன்பு கவனக்குறைவாக பேருந்தை ஒட்டிய ஓட்டுனரை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர் காவல்துறையினர் வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.
இன்றைய செய்திகள் கும்பகோணம் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,kumbakonam news,kumbakonam today tamil news,kumbakonam latest news tamil,kumbakonam flash news