- முகப்பு
- மாவட்டச் செய்தி
- நண்பர்களுடன் கிருஷ்ணா கால்வாயில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி.
நண்பர்களுடன் கிருஷ்ணா கால்வாயில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி.
சுரேஷ் பாபு
UPDATED: May 7, 2023, 7:20:14 PM
திருவள்ளூர் அடுத்த புலியூர் பகுதியில் ஓடும் கிருஷ்ணா கால்வாயில் விடுமுறை தின பொழுதை கழிக்க நேற்று மாலை குளிக்க சென்ற பட்டாபிராம் மற்றும் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி நண்பர்கள் இமானுவேல் (18 ) அவினேஷ் (18 ) அக்ஷயகுமார் (18 ) அதில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது இமானுவேல் என்பவர் நீரில் அடைத்து செல்லப்பட்டார்.
அதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு நண்பர்கள் தகவல் அளித்து தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்திருந்தனர் .
அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மாயமான மாணவன் உடலை கால்வாயில் இறங்கி தேடி வந்திருந்தனர்.
கால்வாயில் 6 அடி உயரத்தில் நீர் செல்வதாலும் இரவு நேரம் ஆனதால் தேடுதல் நிறுத்திய தீயணைப்புத்துறையினர்
பூண்டி ஏரியிலிருந்து கிருஷ்ணா கால்வாய்க்கு செல்லும் தண்ணீரை நிறுத்திய பின்னர்.
இன்று காலை மீண்டும் மாயமான மாணவனை கால்வாயில் இறங்கி தேட ஆரம்பித்தனர்.
அப்போது இன்று காலை புலியூர் அடுத்த வெள்ளானுர் பகுதியில் கிருஷ்ணா கால்வாயில் இளைஞர் உடல் மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் அளித்திருந்தனர்.
அங்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அந்த உடல் மாயமான இமானுவேல் உடல் என தெரிய வந்ததைத் தொடர்ந்து அந்த உடலை மீட்டனர்.
அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையானது மேற்கொண்டு வருகின்றனர்.
விடுமுறை தின பொழுதை கழிக்க நண்பர்களுடன் கிருஷ்ணா கால்வாயில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன்
சக நண்பர்கள் கண்முன்னே நேரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள் மற்றும் அவர் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .