• முகப்பு
  • குற்றம்
  • ஊராட்சி மன்ற துணை தலைவர் சகோதரர் வெட்டி படுகொலை சோழவரம் போலீசார் விசாரணை.

ஊராட்சி மன்ற துணை தலைவர் சகோதரர் வெட்டி படுகொலை சோழவரம் போலீசார் விசாரணை.

L.குமார்

UPDATED: May 8, 2023, 7:03:29 PM

பொன்னேரி அடுத்த நெடுவரம்பாக்கம் கிராமத்தில் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் இளங்கோவன் A/29 மற்றும் அவரது சகோதரர் லட்சுமணன் A/32 ஆகியோர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியதில்,

துணைத் தலைவரின் சகோதரர் லட்சுமணன் படுகாயம் அடைந்து அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு  சென்று மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.

துணைத் தலைவர் இளங்கோவன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சோழவரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கிராமத்தில் அம்பேத்கர் சிலை உடைந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில் விசாரணையை விரைந்து முடிக்க கோரி துணைத் தலைவர் இளங்கோவன் அழுத்தம் கொடுத்துள்ளார்‌.

மேலும் இது குறித்து நேற்று இரவு அந்த கிராமத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக சோழவரம் காவல் நிலையத்தில் இளங்கோவன் மற்றும் அவரது சகோதரர் லட்சுமணன் ஆகியோர் புகார் அளித்துவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்த நிலையில்,

புதரில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக வெட்டியதில் துணை தலைவர் இளங்கோவனுக்கு இரண்டு கைகளிலும் வெட்டுப்பட்டு தொங்கிய நிலையிலும் மற்றும் அவரது சகோதரர் லட்சுமணன் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த நிலையில், 

அவ்வழியாக வந்த காவல்துறையினர்  இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் திமுக பிரமுகரின் தம்பி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • 1

VIDEOS

RELATED NEWS

Recommended