உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பொருள்களை வற்புறுத்தி இருக்கும் சிறார்கள்.

பிலிப்ராஜ் ரவி

UPDATED: May 26, 2023, 7:34:26 PM

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்லும் சாலைகளில் குறிப்பாக அரசு தாவரவியல் பூங்கா சாலைகளில் சிறுவர்கள் (குழந்தை தொழிலாளர்கள் ) ஐந்து ரூபாய் பத்து ரூபாய் என்று கையில் இருக்கக்கூடிய பொருள்களை விற்பதற்காக வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் வற்புறுத்தி தொந்தரவு செய்கிறார்கள்.

அது அன்றாட பிழைப்புக்காக இருந்தாலும் அதை கட்டாயப்படுத்தி வாங்க வைக்கின்றார்கள். இதுபோன்ற தொந்தரவுகளை உள்ளூர் வாசிகளும் அனுபவிக்கின்றார்கள்.

சம்பந்தப்பட்ட துறை அரசு அலுவலர்கள் இந்த விஷயத்தை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

VIDEOS

RELATED NEWS

Recommended