முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக மகளிர் காவல் நிலையம் திறந்து வைத்தார்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்துவைத்தார்.
பின்னர் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ கணேசன் மகளிர் காவல் நிலையத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து ஆய்வு செய்தார்
இதில் டிஐஜி பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கிய ராஜ், ஆய்வாளர் அன்னக்கொடி, நகர்மன்றத் தலைவர் வெண்ணிலா கோதண்டம், துணைத்தலைவர் விபிபி பரமகுரு, ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், நகர இளைஞரணி அமைப்பாளர் சேதுராமன், மங்களூர் ஒன்றிய சேர்மன் கே என் டி சுகுணா சங்கர், நகர கவுன்சிலர்கள் இளையராஜா, கவிதா வேலு மாலதி பிரேம் தகவல் தொழில்நுட்ப விக்கி. மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி.