• முகப்பு
  • aanmegam
  • கராத்தே பயிற்சி மேற்கொண்டுள்ள 150 பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கும் விழா.

கராத்தே பயிற்சி மேற்கொண்டுள்ள 150 பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கும் விழா.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தற்காப்பு கலையான கராத்தே பயிலும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு இன்று தகுதி போட்டி தேர்வு, 4 கட்டங்களாக கும்பகோணம் பாணாதுறை மேனிலைப்பள்ளி வளாகத்தில் தலைமை பயிற்சியாளர் டி ஆர் வினோத்குமார் தலைமையில் நடைபெற்றது இதில் தகுதி பெற்ற மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும், வண்ண இடுப்பு பட்டைகளும் வழங்கப்பட்டது. இஷிரின்யு கராத்தே பயிலும் 150 மாணவ மாணவியர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இப்பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில், அவர்கள் பெற்ற பயிற்சிக்கேற்ப தகுதி போட்டித்தேர்வு நடைபெற்றதை தொடர்ந்து கும்பகோணம் போக்குவரத்து ஒழுங்கு காவல் பிரிவு ஆய்வாளர் சரவணகுமார் தகுதி பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் சான்றிதழ்களையும், அவர்களுக்குரிய வண்ண இடுப்பு பட்டைகளை வழங்கியும் பாராட்டினார். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended