ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள்கோவில் ஊழியரை அதிகாரி ஒருவர் காலால் எட்டிஉதைக்கும் சி.சி.டி.வி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
விருதுநகர்மாவட்டம் ஸ்ரீவில்லி புத்தூரில் புகழ் பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து தரிசிக்கின்றனர்.
இந்நிலையில், ஆண்டாள்கோவில், சக்கரத்தாழ்வார் சன்னதி, கோபுர வாசல் மற்றும் அலுவலகப்பணிகளுக்காகச் செயல் அலுவலர் உட்படசுமார் 30 க்கும் மேற் பட்டோர் பணியில் உள்ளனர்.
இந்நிலையில், இந்தக்கோவிலில் கணக்காளராக பணியாற்றிவருபவர் சுப்பையா. இவர்கோவில் ஊழியரை அவ மரியாதையாக நடத்துவதாகவும், இழிவாக பேசி வருவதாகவும் ஊழியர்மத்தியில் குற்றச் சாட்டு நிலவி வருகிறது. இந்நிலையில், கோவிலில்காவலராக பணியாற்றும் கர்ணன்என்ற ஊழியரை கணக்காளர் சுப்பையா உதைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதில், கோவில் நிர்வாக அலுவலகத்தில் சக ஊழியர்களின் முன்னிலையில் கர்கணை சுப்பையா எட்டிஉதைக்கும் காட்சிகள் இடம் பெறுகின்றன. இதுகுறித்து விசாரணை நடத்தி, சுப்பையா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் தங்களது கருத்தை பொது மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
செய்தியாளர் பா. கணேசன்.