தனியார் மதுபான கடை மீது வெடிகுண்டு வீசிய சிசிடிவி காட்சி.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருவள்ளூர் சாலையில் 4 மாடி கட்டிடத்தில் பெஸ்ட் என்ற தனியார் மதுபான கடை மற்றும் பார் இயங்கி வருகிறது.
இரவு சுமார் 10 மணி அளவில் கடையின் முன்பு மாஸ்க் அணிந்து வந்த மர்ம நபர்கள் திடீரென்று வெடிகுண்டு வீசினர். இதில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்து சிதறியது.
இதனால் மதுபான கடையில் பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் மது குடிக்க வந்தவர்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடினர்.ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தீபிகா மற்றும் ஆய்வாளர் பாபுஜி தலைமையிலான போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து மதுபானக் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
அப்போது உருளையன் பேட்டையில் பதுங்கியிருந்த குபேர் நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் சச்சின், நடராஜர் நகரைச் சேர்ந்த எழில், தென்னஞ்சாலை வீதியைச் சேர்ந்த பிரதாப், மற்றும் உருளையன்பேட்டை சேர்ந்த கௌதமன் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து இரவோடு இரவாக கைது செய்தனர்.
மேலும் பெஸ்ட் ஒயின்ஷாப் மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த உருளையன்பேட்டை போலீசார் வெடிகுண்டு வீசியது ஒயின்ஷாப்பில் மாமுல் கேட்டு தராத காரணமா?
அல்லது முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் புதுச்சேரியில் தொடர்ந்து நடந்து வரும் வெடிகுண்டு வீச்சு சம்பவத்தால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் வெடிகுண்டு வீசி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.