- முகப்பு
- அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் - சாம்பியன்ஸ்.
அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் - சாம்பியன்ஸ்.
நா.வேலாயுதம்
UPDATED: May 17, 2023, 9:09:37 AM
விழுப்புரம் மாவட்ட தொழில் மையம் நடத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடங்க அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் நடத்தபடுகிறது.
சமூக நீதியிலும் சமத்துவத்திலும் பற்றுதி கொண்ட தமிழ்நாடு அரசு எஸ்.சி, எஸ்.டி இளைஞர்களின் தொழில் முனைவோருக்கானச் செயல்படுத்தும் தனி சிறப்பு திட்டமான அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு 18/05/2023 நாளை காலை 10.00 மணி அளவில் V.V.ஆறுமுகம் செட்டியார் மஹால் புதிய பேருந்து நிலையம் அருகில் விழுப்புரத்தில் நடைபெற உள்ளது.
இதில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி பழனி தலைமையின் கீழ் நிகழவுள்ள கருத்தரங்கில் திட்டம் குறித்த விரிவான விளக்குறைகளை வழங்குவதோடும் தொழில் தொடங்குவது மற்றும் அதனை வெற்றிகரமாக மேலாண்மை செய்வது குறித்து திறமைமிகு வல்லுநர்கள் கருத்துரை வழங்க உள்ளனர்.
ஆர்வமுள்ள எஸ்.சி, எஸ்.டி பிரிவு இளைஞர்கள், மாணாக்கர்கள், தொழில் முனைவோர், தொழில் அழகு உரிமையாளர், மக்கள் பணியாற்றுவோர், சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் பால் பற்றுதி கொண்டவர்கள் யாவரும் கருத்தரங்கில் கலந்து கொண்டு திட்டம் குறித்த தகவல்களை பெறுவதோடு
அது உரிய மக்கள் திரளானரைச் சென்றடையும் தகுதியுள்ள எவரேனும் திட்டத்தின் கீழ் பயன்பெற்று அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை எட்டுவதான தமிழ்நாடு அரசின் நோக்கம் நிறைவேறவும் பங்களிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.