• முகப்பு
  • திருவண்ணாமலையில் ஏர் ஹாரன்கள் பொருத்திய பேருந்துகள் பறிமுதல்.

திருவண்ணாமலையில் ஏர் ஹாரன்கள் பொருத்திய பேருந்துகள் பறிமுதல்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவண்ணாமலை நகர பகுதியில் பஸ்கள், கனரக வாகனங்களில் விதிமுறைகளுக்கு மாறாக அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பயன்படுத்தப்படுவதாக திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் குமாரா, மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி, போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், சுப்பிரமணியன், சக்திவேல் மற்றும் போலீசார் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு மற்றும் தனியார் பஸ்களை ஆய்வு செய்தனர். இதில் 55 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. திருவண்ணாமலை செய்தியாளர் பாலாஜி. இன்றைய செய்திகள் திருவண்ணாமலை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Thiruvannamali news,District news,buses fitted with air horns in Thiruvannamalai,thiruvannamalai breaking news

VIDEOS

RELATED NEWS

Recommended