BREAKING NEWS : 22,23,24 ஆம் திகதிகளில் நடத்தப்பட இருந்த தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்தி வைக்கபட்டுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது
THE GREAT INDIA NEWS
UPDATED: Feb 14, 2023, 10:47:54 AM
எதிர்வரும் 22,23,24 ஆம் திகதிகளில் நடத்தப்பட இருந்த தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்தி வைக்கபட்டுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்புக்கான வாக்கு சீட்டு அச்சிடுவதற்கான நிதியினை அரசாங்கம் விடுவிக்காத நிலையில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
இதே வேளை நாளை தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் தபாலில் உரியவர்களுக்கு விநியோகிக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் சகல அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அலுவலகம் சற்று முன்னர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை செய்தியாளர் இர்ஷாத் றஹ்மதுல்லா.