பசுமையின் அர்ப்பணிப்பாளர்கள் சார்பாக போடியில் மரக்கன்று நடவு செய்யப்பட்டது.!!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தேனி மாவட்டம் போடியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் முழுவதும் சுமார் 20000 பனை மரங்களை நடவு செய்து, தொடர்ந்து பராமரித்து வரும் பனை முருகன் அவர்கள் மகன் நினைவாக, போடி பரமசிவம் கோவில் கிரிவலப் பாதையில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது,
பெரியாறு பாசன விவசாய சங்கப் போராளி ஆன்மீகவாதி, விஜய் மாரீஸ் அவர்களும், தேவாரம் தாமஸ் அவர்களும், ஆல் தி சில்ரன்ஸ் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் அவர்களும்,கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
வறியவர்களின் வழிகாட்டி சார்பாக கோகிலா முருகேசன், பரமக்குடி, கருமலை, செந்தில் ஆகியோர்களும், போடி சிபிஏ கல்லூரி முன்னால் முதல்வர் டாக்டர் மனோகரன் அவர்கள் உட்பட பசுமை விரும்புவோர் பலர் கலந்து கொண்டு நடவு செய்த மரக்கன்றுகளுக்கு ட்ராக்டர் மூலம் தண்ணீர் ஊற்தப்பட்டது. இவர்களுடன் யூ டியுப் செய்தி வாசிப்பாளர் மு.டியுல் கலந்து கொண்டார்.
தேனி செய்தியாளர்: இரா.இராஜா