- முகப்பு
- மாவட்டச் செய்தி
- நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
குமரவேல்
UPDATED: May 26, 2023, 11:29:46 AM
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்து நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நெல்லிக்குப்பம் வைடப்பாக்கம் மும்முனை சந்திப்பில் இருந்து தொடங்கி நகராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது.
பேரணியில் நகரமன்ற துணை தலைவர் கிரிஜா திருமாறன், பொறியாளர் பாண்டு, மேலாளர் சரவணன், வருவாய் அலுவலர் சரஸ்வதி, நகரமன்ற உதவியாளர் நாராயணசாமி, இளநிலை உதவியாளர்கள் டெல்லி பாபு,பாபு,கணேஷ் முருகன், மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேற்படி பேரணியில் மிக வேகமாக குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகப்படுத்திட மழைநீர் சேகரிப்பு அவசியம் தேவை...
பெருகிவரும் நீர் தேவைக்களை சமாளிக்க மழைநீர் மிக அவசியம்..
மழைநீர் சேகரிப்பில் வெள்ளம் மற்றும் மண் அரிப்புகளை தடுக்க முடியும்...
நிலத்தடி நீர் சேகரிக்கப்படுவதால் விவசாயம் தடையின்றி நடைபெறும்.,.
என்பன உள்ளிட்ட மழைநீர் சேகரிப்பு குறித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.