கும்பகோணத்தில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் விழிப்புணர்வு பேரணி.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கும்பகோணத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் திருச்சி கோட்டை பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவுப்படி உதவி கோட்ட பாதுகாப்பு ஆணையர் சின்னதுரை வழிகாட்டலின் படி 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் விதமாக தேச ஒற்றுமைக்கான விழிப்புணர்வு பேரணியை காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் துவக்கி வைத்தார் .
இந்நிகழ்ச்சியில் ரயில்வே பாதுகாப்பு படையினர் உதவி ஆய்வாளர் மனோகரன் துணை உதவி ஆய்வாளர் லோகநாதன் விவேகானந்தன் ஆகியோர் தலைமையில் ரயில் நிலையத்திலிருந்து மகமகம் குளம் வரை உறுப்பினர் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் சரவணகுமார் மேற்கு காவல் துறை ஆய்வாளர் பேபி மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
முக்கோணம் செய்தியாளர் ரமேஷ்.