ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பேரூராட்சி சார்பாக திடக்கழிவு மற்றும் மேலாண்மை விழிப்புணர்வு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி சார்பாக திடக்கழிவு மற்றும் மேலாண்மை விழிப்புணர்வு சம்பந்தமாக பள்ளியில் நிகழ்ச்சி நடைபெற்றதுடன் அது சம்பந்தமாக பள்ளி மாணாக்கர்களுக்கு கட்டுரைப்போட்டி , பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன் தலைமையேற்று மக்கும் குப்பை , மக்கா குப்பை பற்றிய விழிப்புணர்வை மாணாக்கர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்து விழாவினை சிறப்பித்தார்.
அத்துடன் பேரூராட்சி அலுவலர் , பேரூராட்சி துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு செல்வி ஆனந்தன் பரிசுகள் வழங்கினார். விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் குமரேசன் மற்றும் உதவி தலைமை ஆசிரியை பொன்மணி வரவேற்புரை நல்கினர்.
இறுதியாக பள்ளியின் தமிழ் ஆசிரியர் பாஸ்கரன் நன்றியுரை நல்கினார் விழா இனிதே நிறைவுற்றது....
ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.