பொன்னேரி அருகே அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரராஜா சுவாமி நூதன ஆலய சுதர்சன மகா ஹோமம்.
L.குமார்
UPDATED: May 5, 2023, 6:55:40 PM
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அரசூர் ஊராட்சிக்குட்பட்ட அண்டவாயில் கிராமத்தில் இளைஞர்கள் உள்ள அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரராஜா சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
திருத்தளத்தில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது.
கடந்த ஒன்றாம் தேதி பந்தகாலுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் கோ பூஜை திருமஞ்சனம் தொடங்கி மகா பூர்ணாத்தின் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சித்ரா பௌர்ணமியா இன்று சுதர்சன ஓமம் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு திருமாங்கல்யம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அரசூர், ரெட்டம்பேடு, அயநல்லூர் உள்ளிட்ட பகுதியைச் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கமிட்டு எம்பெருமானை வழிபட்டு சென்றனர் பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.