• முகப்பு
  • குற்றம்
  • புதுவையில் இருந்து சாராயம் கடத்தி வந்த நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர் கைது.

புதுவையில் இருந்து சாராயம் கடத்தி வந்த நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர் கைது.

குமரவேல்

UPDATED: May 11, 2023, 12:34:40 PM

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குணமங்கலம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமு மகன் ஐயனார் (50) என்பவர் புதுவை மாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தி வந்து அவரது பகுதியில் விற்பனை செய்ததாக நெல்லிக்குப்பம் போலிசாருக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போலிசார் மேற்படி நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மேற்படி நபர் சாராயம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதனையடுத்து மேற்படி நபர் மீது நெல்லிக்குப்பம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended