• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பட்டியலினத்தவர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மக்களை தொழில் முனைவோராக மாற்றும் பொருட்டு "அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்"முகாம்.

பட்டியலினத்தவர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மக்களை தொழில் முனைவோராக மாற்றும் பொருட்டு "அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்"முகாம்.

முத்தையா

UPDATED: May 27, 2023, 7:18:20 AM

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் (26.05.2023) துவக்கி வைக்கப்பட்டது.

இம் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்ததாவது:-

பட்டியலினத்தவர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மக்களை தொழில் முனைவோராக மாற்றும் பொருட்டு "அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்" (Annal Ambedkar Business Champion Scheme AABCS) என்ற புதியதொரு திட்டத்தினை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த 01.04.2023 ஆம் தேதிக்கு பிறகு ஆரம்பிக்கப்படவுள்ள அனைத்து திட்டங்களும் தகுதி வாய்ந்ததாகும். பட்டியலினத்தவர், பழங்குடியினரை கொண்டு ஆரம்பிக்கப்படும் தனிநபர் நிறுவனம், பங்குதாரர் நிறுவனம், எல்.எல்.பி நிறுவனம், மற்றும் (பி) லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயது முடிந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக வயது வரம்பு 55 க்குள் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கல்வித்தகுதி எதும் தேவை இல்லை  ஆட்டுப்பண்ணை, மாட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, மீன்பண்ணை, பன்றி பண்ணை, இரால் வளர்ப்பு, ஆகிய திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வசதி பெறலாம்.

விவசாயத்திற்கு தேவையான கருவிகளை இத்திட்டத்தின் மூலம் வாங்கி வாடகைக்கு பயன்படுத்தலாம்.

குளிர்பதன கிடங்கு, சேமிப்பு கிடங்கு, கல்யாண மண்டபம், தங்கம் விடுதி, பெட்ரோல் பங்க், கேஸ் ஏஜென்சி ஆகியவற்றை அமைப்பதற்கும் இத்திட்டத்தின் மூலம் கடன் வசதி பெறலாம். ஆட்டோ, டாக்ஸி, ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, லாரி, பேருந்து, வேன், போர்வெல் வண்டி. எர்த் மூவர்ஸ் மற்றும் செப்டிடேங்க் கிளீனிங் வேன் ஆகிய வாகனங்களை மானியத்துடன் வாங்கி பயனடையலாம்.

திட்ட மதிப்பீட்டில் 35 % அதிகபட்சமாக ரூபாய் 1.50 கோடி மானியம் வழங்கப்படும். 6% பின்முனை வட்டி மானியமாக வழங்கப்படும்.விருப்பமுள்ள அனைவரும் https://msmeonline.tn.gov.in/aabcs என்ற இணையம் மூலம் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் என‌ மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச. உமா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் த.ரமேஷ், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கத் தலைவர் ந.இளங்கோ, மாவட்ட மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகன், ஒருங்கிணைப்பாளர் டிஐசிசிஐ (DICCI) இரா.சக்கரவர்த்தி, ஒருங்கிணைப்பாளர் (Seeds) சே.சுரேஷ், மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் ரெ.ராமகிருஷ்ணசாமி, மற்றும் தொழில் முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended