புஞ்சை புளியம்பட்டி அருகே தீராத வயிற்று வலியினால் கிணற்றில் குறித்து முதியவர் தற்கொலை

மகேஷ் பாண்டியன்

UPDATED: May 12, 2023, 6:59:41 PM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள மாதம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கப்பன்60 இவரது மனைவி கமலா இவருக்கு ஒரு மகன் இரண்டு மகள் உள்ளனர்.

விவசாய கூலி தொழில் செய்து வரும் கப்பன் (60 )கடந்த சில மாதங்களாக தீவிர வயிற்று வலி நோயால் அவதிப்பட்டு வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்.

இன்று காலை 10 மணி அளவில் வீட்டிற்கு வந்து வெளியே செல்வதாக மனைவி கமலாவிடம் கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் கம்பன் 60 வீடு திரும்பவில்லை மனைவி கமலா (52) அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தபோது அருகில் உள்ள விவசாய தோட்டத்து கிணற்றில் பிணமாக கிடந்தார். 

இதனை அடுத்து புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி கப்பன் (60) உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended