சங்கராபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து 8 பேர் படுகாயம் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெண் கூலித் தொழிலாளர்கள் 10 பேர் சங்கராபுரம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்துவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பும் போது நெடுமானூர் கூட்டுறவு பால் சொசைட்டி அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ திடீரென தலைகீழ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த 8 பேர் படுகாயமடைந்தனர் இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் .
இதுகுறித்து சங்கராபுரம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி . சுரேஷ்