அம்பேத்கர் சிலை விவகாரத்தில் உடனடி தீர்வு காணும் கோட்டாட்சியர்!!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
உத்தமபாளையத்தில் அன்னல் அம்பேத்கர் சிலை பராமரிப்பு சம்மந்தமாக, கோட்டாட்சியர் செல்வி, கெளசல்யா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது, பேச்சுவார்த்தையின் போது ஒரு வார காலத்திற்குள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
கோட்டாட்சியரின் தீவிர முயற்சியால் சிலை அமைந்துள்ள இடத்தை வட்டாட்சியர் அர்ச்சுணன் அவர்கள் தலைமையில், துணை மண்டல வட்டாட்சியர் கண்ணன், நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் காத்த முத்து, வருவாய் ஆய்வாளர் தேவசகாயம், கிராம நிர்வாக அலுவலர் கருப்பையா, நில அளவையர் ஜீவா ஆகியோர்கள் அளவீடு செய்தனர்.
மாவட்ட செய்தியாளர் MP. ஜீவா