எச்சரிக்கை பதிவு
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு. புதிதாக ஏதோ தொலைதொடர்பு நிறுவன கேபிள் பதியும் பணி புதிய தொழில்நுட்பத்துடன் நடைபெறுகிறது. பழைய முறை என்பது சாலை ஓரங்களில் நெடுவதுமாக பள்ளம் தோண்டபட்டு கேபிள்கள் பதிக்கப்படும். தற்போதைய புதிய தொழில்நுட்பமானது ஒரு குழியை நோண்டி விட்டு நூறு அல்லது 200 மீட்டர் தாண்டி இன்னொரு குழியை தோண்டி இடைப்பட்ட இந்த குழிகளுக்கு இடையே போர் அதாவது துளையிடப்பட்டு கேபிள்கள் பதிக்கப்படுகிறது. இதனால் கால விரயம் தவிர்க்கப்படுகிறது. ஆனால் சில இடங்களில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமலே உள்ளது. இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தெளிவான ஹெட் லைட் உடன் மெதுவாக செல்லவும். மதுக்கூர் பாப்பநாடு சாலை வழித்தடம். பட்டுக்கோட்டை வடசேரி மன்னார்குடி வழித்தடம். பட்டுக்கோட்டை மதுக்கூர் மன்னார்குடி வழித்தடம். ஆகியவழித்தடங்களுக்கு இது பொருந்தும்.
செய்தியாளர்
பா. கணேசன்