ஸ்ரீமுஷ்ணத்தில் ஜேபி கல்லூரியில் ரத்ததான முகாம் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் வழங்கினர்!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
ஸ்ரீமுஷ்ணம் ரோட்டரி சங்கம் , ஜே.பி., கல்விக்குழுமம், எஸ்.பி.ஜி., வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி, ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி, ஆரம்ப சுகாதார நிலையம், விருத்தாசலம் அரசு மருத்துவமனை ரத்தவங்கி, தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை ஆகியவை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் ஸ்ரீமுஷ்ணம் ஜே.பி., கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ஆனந்த.வீரவேல் தலைமை தாங்கினார். கல்லூரி மாணவ மாணவிகள், ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள், விருத்தாசலம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் குருதிக் கொடை வழங்கினர். முடிவில் ஜே.பி., பாரா மெடிக்கல் கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்