• முகப்பு
  • குற்றம்
  • திருநங்கையிடம் உல்லாசத்தை அனுபவித்து திருநங்கையின் பைக் மற்றும் மொபைலை திருடி சென்ற வாலிபர்.

திருநங்கையிடம் உல்லாசத்தை அனுபவித்து திருநங்கையின் பைக் மற்றும் மொபைலை திருடி சென்ற வாலிபர்.

ரமேஷ்

UPDATED: Mar 31, 2023, 6:40:49 PM

கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை காவல் நிலைய சரகத்தில் உள்ள இழுப்புக்கேரையில் சுமார் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் குடியிருந்து வருகின்றனர்.

அவர்கள் கும்பகோணம், அரியலூர், பாபநாசம், கபிஸ்தலம், சுவாமிமலை, போன்ற ஊர்களில், நன்கொடைகள், அன்பளிப்பு போன்ற பிழைப்பு நடத்தி வருகின்றார்கள்.

பூமிகா என்ற திருநங்கை கும்பகோணத்தில பேருந்து நிலையத்தில் கலெக்சன் முடித்து வரும் பொழுது பாபநாசம் மேலத்தெரு மதகரம், காசி ஐயா, மகன் ஐயப்பன், (26) என்பவன் மேற்படி திருநங்கைகளுடன் சேர்ந்து எனக்கு அப்பா அம்மா யாரும் கிடையாது.

நான் ஒரு அனாதை நான் உங்களைப் போல் மாற வேண்டும் என்று ஆசை வார்த்தைகளை கூறி அவருடன் புறப்பட்டார் மேலும் அவர் குடியிருக்கும் இலுப்பக் கோரையில், வீட்டிற்கு அழைத்துச் சென்று இரண்டு நாள் அவர் வீட்டில் புழங்கி அவர்களை ஆசை வார்த்தைக்கு கூறி ஏமாற்றி அவர் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்கு தெரியாமல் திருநங்கை வைத்திருந்த இருசக்கர வாகனம் மற்றும் ரொக்கம் பணம் மொபைல் ஆகியவற்றை திருடி சென்று விட்டான். 

இது சம்பந்தமாக அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் திருநங்கைகள் புகார் கொடுத்தனர்.

மேலும் இதுகுறித்து பாபநாசம் காவல்துறை கண்காணிப்பாளர் பூரணி மேற்பார்வையில் காவல் ஆய்வாளரும் வனிதா மற்றும் அய்யம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் மற்றும் முதல் நிலைகாவலர் சௌந்தர் ஆகியோர் சிசிடி கேமராவை ஆய்வு செய்து மற்றும் மொபைல் எண்களை ஆராய்ந்து அவர் நாகப்பட்டினம், மற்றும் பலங்கிமான், ஆகிய ஊர்களில் சுற்றியது தெரியவந்துள்ளது. 

மேலும் அவர் மதகரம் அருகே உள்ள கிராமத்தில் ஒளிந்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அய்யம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் முதல் நிலை காவலர் சௌந்தர் ஆகியோர் மேற்படி எதிரியை கைது செய்தனர்.

ஐயப்பன் இதுபோல ஒயின் ஷாப்புக்கு வருபவர்களை போதையில் ஆழ்ந்து உறங்கியவர்களிடம் பைகளில் பணம் மற்றும் செல்போன் பறிப்பது வழக்கமாக கொண்டவன்.

VIDEOS

RELATED NEWS

Recommended