பொன்னேரி அருகே பட்டப்பகலில் ஐந்து சவரன் நகைக்காக வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 6மணி நேரத்தில் உறவினர் கைது.
L.குமார்
UPDATED: Mar 28, 2024, 5:45:46 AM
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கனகவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான குமாரின் மனைவி சரஸ்வதி (55). இன்று காலை குமார் வெளியே சென்று விட்டு நண்பகல் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.
Also Watch : விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கப்படாதது ஏன்? - துரை.வைகோ
இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.
சரஸ்வதியின் கழுத்தில் இருந்த 5 சவரன் நகை பறிக்கப்பட்டு கொலை நடந்தது தெரிய வந்தது
Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?
இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குமாரின் சகோதரி மகன் அசோக் (30) பணம் கேட்டு சரஸ்வதி தராததால் தாலியை பறித்து கொண்டு கழுத்தறுத்து கொலை செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து கொலை நடந்த 6மணி நேரத்தில் அசோக்கை காவல்துறையினர் கைது செய்தனர்.