• முகப்பு
  • குற்றம்
  • வாள்கள் மற்றும் போதை பொருள் போன்ற கிரிஸ்டல் கல் நிற பவுடரை வைத்திருந்த நபர்.

வாள்கள் மற்றும் போதை பொருள் போன்ற கிரிஸ்டல் கல் நிற பவுடரை வைத்திருந்த நபர்.

மாரிமுத்து

UPDATED: May 23, 2023, 7:54:24 PM

தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசார் (23.05.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவநாயர் காலனியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், 

அவர் அதே பகுதியைச் சேர்ந்த மனுவேல் மகன் அண்டோ (47) என்பதும் அவர் மறைத்து வைத்திருந்த சாக்கு பையில் 5 வாள்கள் மற்றும் போதை பொருள் போன்ற கிறிஸ்டல் கல் நிற பவுடரை வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே தனிப்படை போலீசார்  அன்டோவை கைது செய்து அவரிடமிருந்த 5 வாள்கள் மற்றும் 615 கிராம் போதை பொருள் போன்ற கிரிஸ்டல் கல் நிற பவுடரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended