• முகப்பு
  • குற்றம்
  • ஆரல்வாய்மொழி அருகே துப்பாக்கியால் சுட்டு மிளாவை வேட்டையாடிய கும்பல்.

ஆரல்வாய்மொழி அருகே துப்பாக்கியால் சுட்டு மிளாவை வேட்டையாடிய கும்பல்.

முகேஷ்

UPDATED: May 22, 2023, 8:55:56 AM

கன்னியாகுமாரி மாவட்டத்தில் நேற்று 22.5.2023 அதிகாலை ஆரழ்வாய்மொழி வன பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்ட பகுதியில் மர்ம நபர்கள் மிளா ஒன்றை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

துப்பாக்கி சத்தம் கேட்டு பக்கத்தில் உள்ள  மின் காற்றாலை பணியாளர்கள் வந்து பார்த்த போது மான் வகையை சார்ந்த மிளா ஒன்று குண்டடி பட்டு இறந்து கிடப்பதை கண்டு வனத்துறையினருக்கு  தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து வந்த வனத்துறையினர்  இறந்த மிளாவினை ஆய்வு செய்து வேட்டையாடிய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended