செங்கல் பட்டில் பா.ம.க கூட்டத்தில் நடந்தசம்பவம் ஒன்று கட்சியினரிடையே பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
செங்கல் பட்டில் பா.ம.க கூட்டத்தில் நடந்தசம்பவம் ஒன்று கட்சியினரிடையே பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல் பட்டு அருகே தனியார் திருமணமண்டபத்தில் பாட்டாளிமக்கள் கட்சி சார்பில் செங்கல் பட்டு மத்தியமாவட்டம் மற்றும் செங்கல் பட்டு தெற்குமாவட்ட சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடை பெற்ற பொதுக் கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே. மணி மற்றும் முன்னாள்மத்திய ரயில்வே துறை இணைஅமைச்சர் ஏகே.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
நிர்வாகிகள் பலர் மேடையில் அமர்ந்து இருந்தனர். அப்போது மாவட்டப்பொருளாளர் செல்வி கிருஷ்ண மூர்த்தி அவர்களிடம் பேசுவதற்காக மைக்கொடுக்கப் பட்டது.
செல்வி கிருஷ்ண மூர்த்தி பேசுகையில்..
நிறையபேர் இங்கே வந்து இருக்கிறார்கள். எதிர் பார்க்கவே இல்லை. இவ்வளவு கூட்டத்தை பார்க்கும்போது செம மகிழ்ச்சியாக இருக்கிறது. செமஜாலியாக இருக்கிறது.
நம்மசின்ன ஐயாவை முதல்வராக்க வேண்டும். அந்தசந்தோசத்தை அவருக்கு நாம் கொடுக்க வேண்டும். நாம் இதற்காக நாம் உழைக்க வேண்டும்.
நம்மசின்ன ஐயாவை அழகிலோ, அறிவிலோ அடித்துக் கொள்ள முடியாதவர் முதல்வராக இருக்கிறார். அவரை முதல்வராக்க நாம் தவமிருக்க வேண்டும். தமிழ் நாடே பெருமைகொள்ளும் வகையில் அவர் முதல்வராக இருப்பார்.
அறிவே இல்லாதவர் முதல்வர்.. என்றுகூறிய செல்வி கிருஷ்ண மூர்த்தி, அதன் பின் முதல்வர் ஸ்டாலின்பற்றி சில கடுமையான விமர்சனங்களைவைத்தார். முன்னாள்முதல்வர் கருணாநிதிபற்றியும் விமர்சனங்களைவைத்தார். செல்வி கிருஷ்ண மூர்த்தி ஆரவாரமாகமேடையில் பேச..
அன்பு மணி நெளிய ஆரம்பித்தார். இவர் என்ன இப்படிபேசுகிறாரே என்பது போலநெளிந்தார்.
மற்ற பா.ம.க நிர்வாகிகள் சிலரும் என்னங்கபேசுறாங்க மைக்கவாங்குங்க என்றுசைகை செய்தனர்.
இதனால் மேடையில் பர பரப்பு ஏற்பட்டது. அன்பு மணி சைலண்ட்டாக கண்ணடிக்க ஏ.கே .மூர்த்தி ஓடிவந்து மைக்கைபுடுங்க வந்தார்.
பேசியதுபோதும் என்று அமைதியாக அந்தப்பெண்ணிடம் கூறினார். உடனே பெண் சுதாரித்து கொண்டு நன்றி என்று கூறிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.
மேடையில் அரங்கேறிய இந்தச்சம்பவம் அங்கு பெரியசர்ச்சையை ஏற்படுத்தியது.
செய்தியாளர்
பா. கணேசன்