பாபநாசம் அருகே ராமானுஜபுரத்தில் குடிசை வீடு தீயில் எரிந்து நாசம்.

ஆர்.தீனதயாளன்

UPDATED: May 16, 2023, 1:15:54 PM

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ராமானுஜபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அமுதா (வயது 62). இன்று மதியம் இவர் தன்னுடைய குடிசை வீட்டை பூட்டிவிட்டு, அதே பகுதியில் ஆடு மேய்ப்பதற்காக சென்றிருந்தார். 

இந்த நிலையில் பூட்டியிருந்த அமுதாவின் குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. 

சிறிது நேரத்தில் தீ “மள மள”வென குடிசை முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

தகவல் அறிந்தது அமுதா அலறியடித்துக்கொண்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இதனிடையே அமுதாவின் வீட்டில் இருந்த ரூபாய் 5000. பத்திரம்,செல்போன் மற்றும் 50,000 மதிப்புள்ள பொருள்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

இந்த தீவிபத்து குறித்து கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

VIDEOS

RELATED NEWS

Recommended