- முகப்பு
- திருவாரூரில் நகர்மன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ரோட்டரி உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா.
திருவாரூரில் நகர்மன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ரோட்டரி உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருவாரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடந்து முடிந்த நகர்மன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு 24 வது வார்டில் வெற்றிபெற்ற ரஜினி சின்னா என்கிற சின்ன வீரன் மற்றும் 18 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆசைமணிராமு ஆகியோருக்கு திருவாரூர் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
24வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரஜினி சின்னா என்கிற சின்ன வீரன் ரோட்டரி சங்க உறுப்பினர் மட்டுமல்லாது முன்னாள் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் தலைவராகவும் பதவி வகித்தவர். இந்த நிலையில் இவர் திமுக சார்பில் திருவாரூர் நகராட்சி தேர்தலில் 24 வது வார்டில் போட்டியிட்டு 717 வாக்குகள் பெற்று 300க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதேபோன்று ரோட்டரி சங்க உறுப்பினராக இருக்கும் ராமு என்பவரின் மனைவி ஆசைமணி திருவாரூர் நகராட்சி தேர்தலில் 18வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு 741 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவர்களை கவுரவிக்கும் விதமாக திருவாரூர் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் நகர் மன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற இருவருக்கும் சால்வை அணிவிக்கப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த பாராட்டு விழாவிற்கு வந்திருந்த ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் வெற்றி பெற்ற இருவரையும் வாழ்த்தி பேசினார்கள். இறுதியில் ஏற்புரை வழங்கிய ரஜினி சின்னா தன்னை நம்பி வாக்களித்த தன் வார்டு பொதுமக்களுக்கு தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி மிக சிறப்பாக செயல்படுவேன் என்று உறுதி அளித்தார்.