• முகப்பு
  • district
  • கோவில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 60 வயது முதியவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

கோவில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 60 வயது முதியவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

TGI

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த உள் கிளாப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் இன்னும் சில தினங்களில் திருவிழா நடைபெற உள்ளதால் அந்த கிராமத்தைச்சேர்ந்த சிலர் கோவிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் கோவிலின் மேற்கோபுரத்தில் ஏறி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த அறுபது வயது மதிக்கத்தக்க அண்ணாமலை என்ற முதியவர் அருகிலுள்ள மின் கம்பியில் உரசியதால் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதனையடுத்து கிராமமக்கள் சிகிச்சைக்காக அவரை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். அங்கு அண்ணாமலை சிகிச்சைபலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஆதி. சுரேஷ்

VIDEOS

RELATED NEWS

Recommended