- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சத்தியமங்கல்த்தில் மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.
சத்தியமங்கல்த்தில் மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.
மகேஷ் பாண்டியன்
UPDATED: May 15, 2023, 9:01:22 AM
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அன்னையின் வீதியை சேர்ந்தவர் சண்முகராஜ் இவரது மனைவி பிரேமா மகன் பிரவீன் (13) கொடிவேரி உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
சண்முகராஜ் வடக்கு பேட்டை சந்தன டிப்போ வீதியில் உள்ள தனியார் பள்ளி எதிரே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சண்முகராஜ் உடல்நிலை சரியில்லாததால் மகன் பிரவீன் இன்று காலை மளிகை கடையை திறந்து வைப்பதற்காக காலையில் சென்று கடையை திறந்து லைட் சுவிட்ச் ஆன் செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பிரவீன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த பிரவீன் உடலை கைப்பற்றி பிரேதத்தை பரிசோதனைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.