• முகப்பு
  • sports
  • ஏரோஸ்கேட்டோபால் தேசிய விளையாட்டு போட்டியில் 70வீரர்கள், வீராங்கனைகள் தங்க பதக்கம் வென்று தமிழ்நாடு அணி சாதனை !

ஏரோஸ்கேட்டோபால் தேசிய விளையாட்டு போட்டியில் 70வீரர்கள், வீராங்கனைகள் தங்க பதக்கம் வென்று தமிழ்நாடு அணி சாதனை !

THE GREAT INDIA NEWS

UPDATED: Jan 31, 2023, 11:41:23 AM

8ம்ஆண்டு தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் 28மற்றும் 29ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கேரளா, குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்கள் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில், தமிழ்நாடு ஏரோஸ் கேட்டோபால் சங்கத் தலைவர் ராகேஷ் சுப்ரமணியன் தலைமையில், திருச்சி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், மதுரை, தர்மபுரி என பல மாவட்டங்களில் இருந்து 17வீராங்கனைகள் 57 வீரர்கள் என மொத்தம் 74 பேர் தமிழ்நாடு அணையில் விளையாடினர். 10 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகள் பிரிவு, 14 வயதுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகள் பிரிவு, 14 வயதுக்கு மேல் உள்ள வீரர், வீராங்கனைகள் பிரிவு என மொத்தம் 6பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் தமிழ்நாடு ஸ்கேட்டிங் அணியினர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கங்களை பெற்றனர். மேலும் பல மாநிலங்கள் பங்கு பெற்ற இந்த தேசிய விளையாட்டு போட்டியில் ஒட்டுமொத்த தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் கோப்பையையும் தமிழ்நாடு அணியினர் வென்று சாதனை படைத்துள்ளனர். வீரர், வீராங்கனைகளுடன்பொதுச் செயலாளர் பிரவீன் ஜான்சன் மற்றும் பொருளாளர் தங்க முருகன் ஆகியோர் சென்றிருந்தனர். திருச்சி மாவட்ட செய்தியாளர் ஜே.கே

VIDEOS

RELATED NEWS

Recommended