தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி 4வது மாவட்ட மாநாடு.!!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலூகா தேவாரம் குலாலர் திருமண மண்டபத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தும் 4வது மாவட்ட மாநாடு தோழர் மோகன் மாவட்ட தலைவர் தலைமை , பொம்மையன் , சித்ரா, வேலவன் முன்னிலையில் சாதி ஆணவ படுகொலைகளை தடுத்திட சட்டம் நிறைவேற்று.
தேனி மாவட்டத்தில் சாதிய பாகுபாடு தீண்டாமை பிரச்சினைகளுக்கு தீர்வு செய்திடுக , பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைத்திடு. போன்ற முக்கிய குறிக்கோள்களை நிறைவேற்றக்கோரி தேவாரம் பேரூந்து நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து குலாலர் திருமண மண்டபத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஊர்வலம் முடிந்தது.
அதன் பின்னர் மாநாடு குறித்து கூட்டணி கட்சி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, விவசாய தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம்,DYFI,SFI,CPI, CP(I)M, ஆகிய. அமைப்புகள் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்ட செய்தியாளர் MP.ஜீவா