வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட்ட 50 கிலோ கொண்ட 400 மூட்டை ரேஷன் அரிசி.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையிலான போலீசார் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திருநரங்குன்றம் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் சந்தேகத்தை இடமாக நின்று கொண்டிருந்த ஒரு மினி லாரியை மடக்கி சோதனை செய்தபோது அதை ஓட்டி வந்தவர் உள்ளிட்ட அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.
லாரியில் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடை கொண்ட 400 மூட்டை ரேஷன் அரிசி வெளிமாநிலத்திற்கு கடத்த இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து ரேஷன் அரிசி மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளகுறிச்சி செய்தியாளர் ஆதி.சுரேஷ்