பூந்தமல்லியில் வெவ்வேறு இடங்களில் ரூ.4 லட்சத்து 65 ஆயிரம் பணம் பறிமுதல்.

S.முருகன்

UPDATED: Mar 27, 2024, 12:42:15 PM

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

Also Watch : விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கப்படாதது ஏன்? - துரை.வைகோ

இதன் தொடர்ச்சியாக பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் பூந்தமல்லி அடுத்த கீழ்மனம்பேடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்ட போது

Also Watch : குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம் செய்வதறியாது தவித்த பெற்றோர்.

அந்த வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்ததில் அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் பணம் இருப்பதை கண்டுபிடித்தனர். 

Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?

இதே போல் கோலப்பன்சேரி பகுதியில் ஒரு எ ஆவணங்கள் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் எடுத்து வரப்பட்ட ரூ.90 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Also Watch : அமலாக்கத் துறையினரையே உளவு பார்த்த கெஜ்ரிவால் நடந்தது என்ன ?

ஒரே நாளில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் ரூ.4,65,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் பூந்தமல்லியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended