• முகப்பு
  • வாலாஜாபாத் அருகே அதிமுக விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் வீட்டின் கதவை உடைத்து 35 லட்ச ரூபாய் மத?

வாலாஜாபாத் அருகே அதிமுக விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் வீட்டின் கதவை உடைத்து 35 லட்ச ரூபாய் மத?

Vijaya lalshmi

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வாலாஜாபாத் அருகே அதிமுக விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் வீட்டின் கதவை உடைத்து 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் கொள்ளை. சம்பவ இடத்தில் ஏடிஎஸ்பி தலைமையில் வாலாஜாபாத் காவல் துறையினர் விசாரணை. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள நாயக்கன் குப்பம் ஊராட்சியை சேர்ந்தவர் என்.ஆர்.பழனி. இவர் அதிமுக விவசாய அணி பிரிவு காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராகவும், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரராகவும் உள்ளார். விவசாயம் செய்து வருகிறார். என்.ஆர்.பழனி வசித்து வந்த பழைய வீட்டை இடித்துவிட்டு அதே இடத்தில் புதியதாக வீடு கட்டி உள்ளார். புதிய வீட்டின் பின்புறம் உள்ள பழைய வீட்டின் அறையில் குடும்பத்தினருடன் கடந்த ஒரு வருட காலமாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வீட்டின் கிரகப்பிரவேசம் நடைபெற்றுள்ளது. கிரகப்பிரவேசம் முடிந்த நிலையில், நகை, பணம் ,புகுமனை புகுவிழாவுக்கு நண்பர்கள் உறவினர்கள் அளித்த கிப்ட்டுகள் என அனைத்தையும் பழைய வீட்டில் வைத்து பூட்டிவிட்டு புதிய வீட்டில் இரண்டு நாட்களாக குடும்பத்தினர் தங்கி உள்ளனர். இந் நிலையில் புதிய வீட்டின் பின்புறம் உள்ள பழைய வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 55 சவரன் தங்க நகைகள்,1 கிலோ வெள்ளிப் பொருட்கள் 3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணம்,மற்றும் புதிய வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள், அளித்த பரிசுப் பொருட்களும், மொழிவைத்த கவர்கள் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.கொள்ளை போன அனைத்துப் பொருட்களின் மதிப்பு சுமார் 35 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இன்று அதிகாலையில் பழனி பழைய வீட்டுக்கு சென்ற போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்த அதிர்ச்சி அடைந்து பார்த்தபோது பீரோவில் இருந்து பணம் நகைகள் மற்றும் கிப்ட் பொருட்கள் என அனைத்தும் கொள்ளை போனது தெரியவந்து அதிர்ச்சியுற்றார். இதுகுறித்து உடனடியாக வாலாஜாபாத் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருட்டு நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் சம்பவ இடத்துக்கு ஏடிஎஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended