வாழ்வாதாரம் இழந்து வாடும் 30 குடும்பங்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் மாவட்டம் கொத்தட்டை ஊராட்சிக்குட்பட்ட தோப்பிருப்பு
தைக்கால் K. பஞ்சக்குப்பம் கொத்தட்டை ஊராட்சிக்குட்பட்ட தோப்பிருப்பு
பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்களில் சுமார் 30 குடும்பங்கள் வசிக்கின்றார்கள்.
கொத்தட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி மற்றும் கிராம நிர்வாக விஓ ஒன்றினைந்து நேற்று முப்பது குடிசை வீடுகளை அகற்றியுள்ளனர்.
இதனால் வாழ்வாதாரம் இழந்து வாடும் 30 குடும்பங்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி.