அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 ரவுடிகள்..

மாரிமுத்து

UPDATED: May 31, 2023, 11:10:49 AM

தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் அருண்குமார் (19) என்பவரும் தூத்துக்குடி தஸ்நேவிஸ் நகரைச் சேர்ந்த பத்மநாபன் மகன் பிரகாஷ் (19) என்பவரும் கடந்த 28.05.2023 அன்று ஒரு துக்க நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது‌.

இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 29.05.2023 அன்று பிரகாஷ் தனது நண்பர்களான தூத்துக்குடி சேதுராஜா தெருவைச் சேர்ந்த செல்லமுத்து கணேஷ் மகன் கெளதம் கண்ணன் (19), தஸ்நேவிஸ் நகரைச் சேர்ந்த சந்தனராஜ் மகன் சந்தானபாரத் (19),

தூத்துக்குடி அலங்காரதட்டு பகுதியைச் சேர்ந்த ஞானசேகர் மகன் மைக்கேல் (22) மற்றும் தூத்துக்குடி பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் மகன் ஜோஸ்வா (20) ஆகியோருடன் சேர்ந்து தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன் சுப்பையா நகர் பகுதியில் வைத்து அருண்குமாரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து அருண்குமாரின் சகோதரர் மகாராஜன் (25) என்பவர் நேற்று (30.05.2023) அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு எதிரிகள் கௌதம் கண்ணன், சந்தானபாரத் மற்றும் மைக்கேல் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.

மேலும் தலைமறைவாக உள்ள மற்ற எதிரிகளையும் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட எதிரிகளில் கௌதம் கண்ணன் மீது ஏற்கனவே தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், சந்தானபாரத் மீது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended